RSS

Category Archives: பணம் பந்தியிலே

பணம் பந்தியிலே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதை
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை
பிழைக்கும் மனிதனில்லை

ஒண்ணும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே – அவனை
உயர்த்தி பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான் – பணம்
அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (2) – இதை
பார்த்து எண்ணி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்ந்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு (2) – நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

திரைப்படம் – பணம் பந்தியிலே
பாடலாக்கம் : கவி கா.மு. ஷெரீப்
இசை – கே. வி. மகாதேவன்
பாடியவர் – T. M. சௌந்தரராஜன்

வெளியீடு – 7 – நவம்பர் 1961

(பணம் பந்தியிலே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்)