(தொகையறா)
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழச் செய்தாள்
* *
அன்னையைப் போலொரு தெய்வமில்லை – அவள்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்
பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
பாடலாசிரியர் : கவி. கா.மு.ஷெரீப்