(பல்லவி)
வாளினைக் கையில் எடடா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ (வாளினை)
(அநுபல்லவி)
நாளல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ (வாளினை)
(சரணம்)
ஆள்வோரும் செல்வர்க்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே நீ (வாளினை)
– கவி. கா.மு.ஷெரீப்