RSS

Category Archives: ஏரிக்கரையின் மேலே

கலைஞரின் பார்வையில் கவி.காமு.ஷெரீப்

“திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால் அந்தப் பாடல்களும் கூட நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அண்ணன் கவி கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” என்கின்ற பாடலைக் கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக் கேட்டு அவர்கள் அந்தப் பாட்டிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்”

கலைஞர் மு. கருணாநிதி

தொடர்புடைய சுட்டி :
தமிழ் சினிமாவும் பாடல்களும்

தலைவர் கலைஞரை திருவாரூரில் இருந்து அழைத்து வந்து தான் பணிபுரிந்த மார்டன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்துவிட்டவர் கவி.கா.மு.ஷெரீப்.    ஆதாரம்-நெஞ்சுக்கு நீதி.

 

ஏரிக்கரையின் மேலே..

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்