RSS

Category Archives: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
                   உண்மைக் காதல் மாறிப் போகுமா?

பெண் :  முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
                    இன்னாளிலே காதல் மண்ணாவதோ?

ஆண் :    சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
                     என்னாசை தங்கமே நேசம் மாறுமா?

பெண் :    பகையாலே காதலே அழியாது கண்ணா
ஆண் :     பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                      நாளுமே.. !  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)
பெண்  :    என்னாவியே கண்ணே உன் போலவே
                     மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா?

ஆண் :    இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
                    என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

ஆண் :    அறியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பெண் :    பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                     நாளுமே..!  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)

பாடியவர்கள் : சரோஜினி,  ஸ்ரீனிவாஸாச்சாரி