RSS

Category Archives: நூற்றாண்டு விழா

கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா

 

Tags:

சென்னையில் நூற்றாண்டு விழா

KM 4

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி செய்தி தெரியுமா, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, உலவும் தென்றல் காற்றினிலே, ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே.. போன்ற, காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப்.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து, தெற்கெல்லைப் போராட்டம், திருத்தணி மீட்புப் போராட்டத்தில் தளபதியாக விளங்கியவர். திமுக தலைவர் கலைஞரின் திரையுலக நுழைவுக்கு காரணமாக இருந்தவர்.

கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன.

பி.எச்.அப்துல் ஹமீத் தொகுப்புரையில், பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, முகேஷ், குமரி அபூபக்கர் ஆகியோரின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

நன்றி : நக்கீரன்

 
Image

திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

K.M. 1