RSS

Category Archives: பாட்டும் நானே! பாவமும் நானே!

“பாட்டும் நானே” யாரெழுதியது?

திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்

ஆதாரம்:

நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,

ஆசிரியர் : ஜெயகாந்தன்

வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17

 

 

பாட்டும் நானே பாவமும் நானே

இந்தப் பாடல் உண்மையிலேயே கவி கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது. ஆனால் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும்

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே

(பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு

(பாட்டும்)

 

பாட்டும் நானே! பாவமும் நானே!

ஏ.பி.நாகராஜன் இயக்கி அபார வெற்றியை அடைந்த படம் திருவிளையாடல்.  திரையுலக வரலாற்றில் தன்னிகரில்லா சாதனை புரிந்த படம் இது. படத்தில் இப்பாடலை எழுதியது கவிஞர் கண்ணதாசன் என்று பெயர் வெளியாகியது. உண்மையிலேயே இப்பாடலை எழுதியது கவி கா.மு.ஷெரீப் அவர்களேதான். கே.வி.மகாதேவன் இசையமைக்க, டி.எம்.செளந்தர்ராஜன் பாட,  காணடா ராகத்தில் அமைந்த பாடல் இது :

பாட்டும் நானே பாவமும் நானே –
பாடும் உனை நான் பாட வைத்தேனே!
கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ?

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகம் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே!

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா – உன் ஆணவம் பெரிதா?

ஆலவாய னோடுபாட வந்தவனின்
பாடும் வாயை இனி மூட வந்ததொரு…..

(பாட்டும்)

படம்: திருவிளையாடல் (வருடம் – 1965)