RSS

Category Archives: பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே!

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே!

படம் : தேவகி
நடித்தவர்கள் : என்.என்.கண்ணப்பா & வி.என்.ஜானகி
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் & பி. லீலா
இசை : ஜி.ராமனாதன்
இயற்றியவர் : கவி கா.மு.ஷெரீப்

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே !
தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே ( 2 தடவை)

ஆஆஆஆ..ஆஆஆஆ…..ஆஆஆஆ…
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
ஆஆஆ…ஆஆ..ஆஆஆஆஆ..

சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேர‌வே துன்ப‌ம் நீங்குமே
எந்நாளுமே இன்ப‌ம் ஓங்குமே

சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேர‌வே துன்ப‌ம் நீங்குமே
எந்நாளுமே இன்ப‌ம் ஓங்குமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே

ஆஆஆஆ..ஆஆஆஆ…..ஆஆஆஆ…
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும்
இன்பம் நாம் அடைவோம்
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும்
இன்பம் நாம் அடைவோம்
ஆஆஆ…ஆஆ..ஆஆஆஆஆ..
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
நீயும் பாடுவாய்
பைய‌ன் தூங்குவான்
ஆனந்தாய் நான் காணுவேன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
நீயும் பாடுவாய்
பைய‌ன் தூங்குவான்
ஆனந்தாய் நான் காணுவேன்
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே !