RSS

Category Archives: பொன்னான வாழ்வு

பொன்னான வாழ்வு (டவுன் பஸ் 1955)

டவுன் பஸ் (1955) திரைப்படத்தில் கா.மு.ஷெரீப் எழுதி கே.வி.மஹாதேவன் இசையமைத்து திருச்சி லோகநாதன்  எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காலத்தைக் கடந்த கனிவான பாடல்

 

Tags: ,

பொன்னான வாழ்வு மண்ணாகி போனா

பெண்: பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
                 துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?

                 பண்போடு முன்னாளில் – அன்பாக
                 என்னோடு வாழ்ந்தாரே
                 வீணான பாலாய் விரும்பாத பூவாய்
                 இன்றென்னை விடுத்தாரே
                 என் அன்பை மறந்தாரே (பொன்னான வாழ்வு)

ஆண்:  பண்பாடு இல்லாமல் – மண்மீதே
                 பாழாகி நொந்தேனே
                 தேனான வாழ்வு திசை மாறிப் போச்சே
                 நிம்மதி இழந்தாச்சே
                 தீராத பழியாச்சே

பெண்:   பெண்ணென்று பாராமல் – எல்லோரும்
                   என்மீது பழி சொல்வார்
                   உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே
                   ஊராரும் அறிவாரோ?
                   என் வாழ்வை அழிப்பாரோ?

பாடியவர்கள் : ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்